அரியலூர்

மோசடி செய்து அரசு உதவித்தொகை பெற்று வந்த முதியவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அரசு அதிகாரிகளை ஏமாற்றி உதவித் தொகை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (64). இவரது மகன் மருதகாசி ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, ராஜமாணிக்கம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பெயர் திருத்தம் செய்து, அரசு உதவித் தொகை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜயங்கொண்டம் வட்டாட்சியர் குமரய்யா, இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை சனிக்கிழமை இரவு கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT