அரியலூர்

கட்செவி மூலம் தகவல் பரப்பியவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கட்செவி மூலம் தகவல் பரப்பியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
செந்துறையை அடுத்த பொன்பரப்பியில் நிகழ்ந்த வன்முறை குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், கடந்த 19 ஆம் தேதி அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்தை தேர்தல் முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கிவிட்டனர். அனைவரும் வாருங்கள், அதனை தட்டிகேட்க வேண்டும் என்றும் கட்செவியில் பரப்பினாராம். இதுகுறித்து தளவாய் போலீஸார் வழக்குப்பதிந்து, வெற்றிச்செல்வனை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT