அரியலூர்

கழிவறை சுவர் இடிந்து பள்ளி மாணவர் காயம்

DIN

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் பலத்த காயமடைந்தார்.
செந்துறை அருகிலுள்ள விழுப்பணங்குறிச்சியில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 5 - ஆம் வகுப்பு படித்து வரும் நல்லநாயகபுரம்  சரவணன் மகன் சந்தோஷ்குமார்(10), புதன்கிழமை பள்ளி இடைவேளையின் போது மாணவர்களுடன் கழிவறைக்குச் சென்றார்.
 அங்கு அவர் மீது கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.  உடனே சகமாணவர்களின் அலறல் சப்தத்தை கேட்டு ஆசிரியர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த சந்தோஷ்குமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதுகுறித்து செந்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT