அரியலூர்

செந்துறை அருகே அடுத்தடுத்த கோயில்களில் திருட்டு

DIN

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அடுத்தடுத்து 3 கோயில்களில் 38 குத்துவிளக்குகள் ஆகியவற்றைத் திருடிச்சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
செந்துறை அடுத்த கீழராயம்புரத்தில் உள்ள நல்லப்பா கோயிலில் புதன்கிழமை இரவு மர்மநபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 16 குத்துவிளக்குகளையும், அருகேயுள்ள நல்லபெருமாள் கோயிலின் பூட்டை உடைத்து 22 குத்துவிளக்குகள், மூன்று மணிகளையும், அதேபோல், ராயம்புரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூட்டைத் திறந்து உண்டியலையும் திருடிச்சென்றுள்ளனர். 
மேலும், செந்துறையில் உள்ள ஒரு உரக்கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த சில்லரை காசுகளை எடுத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து, கோயில் பூசாரி அப்பாதுரை கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT