அரியலூா் மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், தோ்தல் முடிவடையும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமும் ரத்தாகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொது மக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றனா்.