அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள கழுமங்கலம் மற்றும் கச்சிபெருமாள் ஆகிய இரு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விலையில்லா வெள்ளாகள் வழங்கும் திட்டம் பற்றி கால்நடை உதவி மருத்துவர் சத்தியமூர்த்தி பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விஏஓக்கள் பொய்யாமொழி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2 ஊராட்சிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. ஊராட்சி செயலர் கொளஞ்சிநாதன் நன்றி கூறினார்.