அரியலூர்

துப்புரவு பணியாளரை தாக்கியவர் கைது

DIN


அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே துப்புரவுப் பணியாளரைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விளாங்குடி காலனித் தெருவைத் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர், விளாங்குடி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (46)  என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை மது போதையில் வந்த கணபதி  பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர் லோகநாதனை தகாத வார்த்தையால் திட்டித் தாக்கியுள்ளார். இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் லோகநாதன்  அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கணபதியை சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT