அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் அருகே விவசாயியை சுத்தியலால் தாக்கிய வழக்கில் ஒருவர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஆண்டிடம் அருகேயுள்ள கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் விக்டர் (40). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தெய்வநாதன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜான் விக்டர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெய்வநாதன், அவரது மனைவி பிரான்சிஸ் மேரி, மகன்கள் சகாயசெல்வம், அஜித் குமார் ஆகியோர் ஜான்விக்டரை தகாத வார்த்தையால் திட்டி சுத்தியலால் தாக்கியுள்ளனர். ஜான் விக்டர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து அஜித் குமாரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடிவருகின்றனர்.