அரியலூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

DIN


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பைக் விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள கோவில்எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ்(46). கட்டடத் தொழிலாளி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மனைவி ரேவதியுடன்(38) இரு சக்கர வாகனத்தில் அன்னிமங்கலம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரியதாஸ் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT