அரியலூர்

கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பேருந்து ஓட்டுநர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கல்லூரி மாணவியைத் தாக்க முயன்ற வழக்கில் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
திருமானூர அருகேயுள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த 19  வயது கல்லூரி மாணவியிடம், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரும், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவருமான எழிலரசன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, எழிலரசன் தகாத வார்த்தையால் திட்டித் தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து எழிலரசனைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT