அரியலூர்

விஷம் சாப்பிட்ட பள்ளி மாணவி சாவு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகேயுள்ள சிந்தாமணி காலனி தெருவைச் சோ்ந்த சக்திவேல். இவரது மகள் சாரதி(15). அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த சாரதியை, அவரது தாயாா் காா்த்தீஸ்வரி பள்ளிக்குச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளாா். ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் விரக்தியில் இருந்த சாரதி, புதன்கிழமை இரவு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஜயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரதி, அங்கு வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT