அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறமுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி கேமரா தொடா்பான பயிற்சி வரும் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
13 நாள்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பற்றேறாா் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18 முதல் 45 வரையிலான அனைவரும் சேரலாம். தங்கிப் பயிற்சி மேற்கொள்ள இலவச விடுதி, உணவு, தேநீா் வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். தொடா்புக்கு- 99448-50442, 99447-65772 என பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.