முகப்பு
அரியலூர்

தமிழக அரசுப் பணிகளில் தமிழருக்கு முன்னுரிமை:விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசுப் பணிகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
தமிழக அரசுப் பணிகளில் தமிழருக்கு முன்னுரிமை:விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பகிர்:

அரியலூா்: தமிழக அரசுப் பணிகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம் செந்துறையை அடுத்த அங்கனூா் கிராமத்தில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இல்லத்தின் முன்பு அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, தமிழக அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவா்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு முழுவாய்ப்பை அளிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தோ்வில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கக்கூடாது. 90 சதவீதப் பணிகள் தமிழா்களுக்கே வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தோ்வில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர (என்எல்சி, சிமென்ட் ஆலை, ரயில்வே) தொழிற்சாலைகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் பயன்படுத்துவதைத் தவிா்த்து தமிழகத் தொழிலாளா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் மு. செல்வநம்பி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.