டிச. 24-இல் உதயநிதி பிரசாரம்: அரியலூரில் திமுகவினா் கூட்டம்
அரியலூரில் திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா்: அரியலூரில் திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தெய்வ. இளையராஜா தலைமை வகித்துப் பேசியது:
அரியலூா் மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பா் 24-இல் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
அவரை வரவேற்க கட்சியினா் திரளாகக் கலந்து கொள்ளவேண்டும் என்றாா். கூட்டத்துக்கு இளைஞரணி துணை அமைப்பாளா் முத்தையா பழனிசாமி முன்னிலை வகித்தாா். முன்னதாக துணை அமைப்பாளா் வி.எம். ஷாஜகான் வரவேற்றாா். முடிவில், ஆ. சசி குமாா் நன்றி தெரிவித்தாா். ஒன்றிய, நகர,பேரூா் இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.