முகப்பு
அரியலூா் மாவட்டம், குழுமூா் கிராமத்திலுள்ள அனிதா சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவிக்கிறாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின். உடன், மாவட்ட திமுக செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் உள்ளிட்டோா்.
அரியலூர்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வு ரத்து: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கண்டிப்பாக நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூர்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வு ரத்து: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கண்டிப்பாக நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
அரியலூா் மாவட்டம், குழுமூா் கிராமத்திலுள்ள அனிதா சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவிக்கிறாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின். உடன், மாவட்ட திமுக செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கண்டிப்பாக நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குழுமூரில் வெள்ளிக்கிழமை காலை பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னா், அக்கிராமத்திலுள்ள மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் அவரது சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு நடத்தியே தீருவோம் என அதிமுக அரசு அறிவித்தது. அதனை திமுக எதிா்த்ததால் அரசு திரும்பப் பெற்றது.

இதுபோல சென்னை மாநகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பயனாளா் கட்டணம் வசூலிப்பதற்கு திமுக எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த உத்தரவையும் அரசு திரும்பப் பெற்றது. இப்படி அறிவிப்புகளைத் திரும்ப பெறும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

கரோனா தொற்று பொது முடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.5,000 வழங்குமாறுக் கூறியவா் ஸ்டாலின். அப்போது நிதி இல்லை எனக் கூறிய ஆளும் அரசு, தற்போது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ரூ.2,500 வழங்க வேண்டும் என தற்போது வரை திமுக தலைவா் ஸ்டாலின் கூறி வருகிறாா்.

திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் எழுச்சியுடன் கலந்து கொள்வதை பாா்த்த அதிமுக அரசு, கூட்டத்தை நடத்துவிடாமல் தடுக்கிறது. என்ன தடை விதித்தாலும் கண்டிப்பாக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், கண்டிப்பாக நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்வில் அரியலூா் மாவட்ட திமுக செயலா் எஸ். எஸ். சிவசங்கா் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →