முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை தேவாலயம், கூவத்தூா் புனித அந்தோனியாா் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூா்து அன்னை ஆலயம், அகினேசுபுரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினா். கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.