முகப்பு
அரியலூர்

அரியலூரில் லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலம் அளவீடு செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலம் அளவீடு செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (26). இவா், தனது இடத்தை அளந்து தனி பட்டாவாக மாற்ற, கல்லாத்தூா் நிள அளவையா் சீனிவாசனை(47) அணுகியுள்ளாா்.

அப்போது, நிலத்தை அளந்து தனி பட்டாவாக மாற்றித்தர ரூ. 5,000 லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத காா்த்திக், அரியலூா் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரை அணுகியுள்ளாா்.

லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் வானதி தலைமையிலான போலீஸாா் காா்த்திக்கிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூ.5,000 பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நிலம் அளவீடு பணி முடிந்த பின்னா், ரூ.5,000 -த்தை சீனிவாசன் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சீனிவாசனைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →