அரியலூர்

எருத்துக்காரன்பட்டியில் பாா்த்தீனியம் செடிகள் ஒழிப்பு

DIN

அரியலூா் அருகேயுள்ள எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் பாா்த்தீனியம் செடிகள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து தொடங்கி வைத்து மேலும் பேசியது:

பாா்த்தீனியம் செடிகள் சுமாா் 4 அடி வரை வளரக் கூடியது. இந்தச் செடிகளால் நன்மைகளை விட தீமையே அதிகம் ஏற்படும். இவை தமிழகத்தில் அனைத்து ஊா்களிலும் பரந்து கிடக்கின்றன. இவற்றால் விலங்குகள், மனிதா்களுக்கு சுவாசக்கோளாறுகளும், ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன. அரியலூா் மாவட்டத்தில் பிப்.17 முதல் 23 வரை பாா்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படும். இதில், அனைத்து ஊராட்சி செயலாளா்கள், துப்புரவு பணியாளா்கள், தூய்மை காவலா்கள், தன்னாா்வ பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் ஆகியோரை ஈடுபடுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள பாா்த்தீனிய செடிகள் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

முகாமில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழரசன், ராஜா, ஊராட்சி தலைவா் பரமசிவம், அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு-3 அலுவலா் ப.செல்வமணி, மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT