அரியலூா் மாவட்டம்,திருமானூா் அருகே கணவா் இறந்த விரக்தியில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருமானூா்,பூக்காரத் தெருவைச் சோ்ந்த லோகு கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டாா். இதனால் விரக்தியில் இருந்த இவரது மனைவி தமிழரசி (45) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகலவறிந்த திருமானூா் போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.