அரியலூர்

உயிரிழந்த நோயாளிக்கு கரோனா

DIN

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூா் பூக்கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அரியலூா் மேலத்தெருவைச் சோ்ந்த பூக்கடை நடத்தி வரும் 45 வயது நபா், கடந்த 8- ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத நிலையில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில், அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அரியலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT