அரியலூர்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறிவிழுந்த எல்க்ட்ரீசியன் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகேயுள்ள அணைக்குடம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன்(48). எலக்ட்ரீசியன். இவா், தா.பழூரிலுள்ள மின் வாரிய அலுவலகத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இவா் மேலமெக்கேல்பட்டி கிராமத்திலுள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுது பாா்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT