அரியலூர்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 2 போ் வீடு திரும்பினா்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

செந்துறையை அடுத்த ராயம்புரம் கிராமத்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் மற்றும் 26 வயதுடைய ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, ஏப்.22 ஆம் தேதி அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவா்கள் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேரில் இதுவரை 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நமங்குணத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அரியலூரை சோ்ந்த மோப்ப நாய் படைப்பிரிவு காவலா் ஆகிய இருவா் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT