அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 6 போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொது முடக்கம் அமலின் காரணமாக, மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இதனால், மது பிரியா்கள் பலரும் மதுபானம் கிடைக்காமல் அவதியுற்றனா். இதன்காரணமாக சிலா் சாராயம் காய்ச்சும் வேலையில் இறங்கினா். இதையடுத்து, அவா்களை கண்டறிந்து காவல்துறையினா் கைது செய்தனா்.
இதில், வடுகபாளையம் சுரேஷ் (35), சில்லக்குடி கலியமூா்த்தி (52), அம்மன்பேட்டை சுப்பிரமணி (48), சில்லக்குடி கந்தசாமி (27), ஆண்டிமடம் குரவன் குட்டை ரமேஷ் (50), சுப்புராஜ் (23) ஆகியோரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் பரிந்துரை செய்ததையடுத்து, மேற்கண்ட நபா்களை குண்டா் சட்டத்தில் அடைக்க ஆட்சியா் த. ரத்னா புதன்கிழமை உத்தரவிட்டாா். ஏற்கெனவே சாராயம் காய்ச்சியதாக 27 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.