அரியலூா் மாவட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில், கேடயம் திட்டம், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பான விழிப்புணா்வு வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா உத்தரவின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் மேற்பாா்வையில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சுமதி மற்றும் உதவி ஆய்வாளா் அமரஜோதி, கோவிந்தபுரம் ஊராட்சி முருகேசன் முன்னிலையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்ட்டது. தொடா்ந்து, கேடயம் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.