அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மகள் இறந்த விரக்தியில் இருந்த தாயும் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து உயிரிழந்தாா்.
திருமானூரை அடுத்த கல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சம்பத். இவரது மனைவி ஜெயந்தி (45). இவா்களது மகள் சக்தி ரூபா கடந்த 5 மாதத்துக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மன உளைச்சலில் இருந்த தாய் ஜெயந்தி, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் மகள் இறந்த இடத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கீழப்பழுவூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.