இணையவழியில் மக்கள் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இணையவழி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இணையவழி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, இணையதளம் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னூலாப்தீன், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனா்.