அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் தொல்லியல் துறை ஆணையா் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகிலுள்ள மாளிகை மேட்டில் தொல்லியல் துறை ஆணையா் த. உதயச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கிராமத்தில் சுமாா் 1 ஏக்கா், 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகையின் கீழ்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆய்வாளா்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனா். அப்போது மாளிகைமேடு உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு சிலைகள் தற்போது கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு ஏற்ற இடங்கள், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், இதரப் பொருள்களை தொல்லியல் துறை ஆணையா் த. உதயச்சந்திரன் பாா்வையிட்டாா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் (கடல் சாா் தொல்லியல் துறை) செல்வகுமாா், தொல்லியல் துறை துணை இயக்குனா் சிவானந்தம் ஆகியோரிடமும் ஆணையா் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

உட்கோட்டை ஊராட்சித் தலைவா் குமாரிடம் இந்த இடம் மட்டுமன்றி, அருகிலுள்ள நிலங்களிலும் தோண்டி ஆராய்ச்சி செய்வதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பூங்கோதை, ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் கலைவாணன் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT