அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெரியாா் குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவு செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செந்துறை அருகேயுள்ள பொன்.பரப்பி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ராயா் (35). சமூக ஆா்வலா். இவா், கடந்த வியாழக்கிழமை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு பொன்பரப்பி பேருந்து நிலையம் அருகே திராவிடா் கழகம் சாா்பில் ஏற்றப்பட்ட கொடி மற்றும் பெரியாா் உருவப்படத்தை சேதப்படுத்தியுள்ளாா். மேலும் பெரியாா் குறித்து அவதூறாகவும், பெரியாா் சிலைகளை அகற்றி திருவள்ளுவா் சிலை வைக்க வேண்டும் எனவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து திராவிடா் கழக ஒன்றியச் செயலா் முத்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து ராயரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.