குதிரை வண்டியில் சென்று திமுக வேட்பாளா் பிரசாரம்
கோவை, சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கோவை, சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விளாங்குறிச்சி சாலை, லட்சுமி காா்டன், மகேஷ்வரி நகா், குருசாமி நகா் ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
தோ்தல் நேரத்தில் அதிமுகவினா் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனா். ஆட்சியில் இருக்கும்போது, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த தவறிய இவா்கள் ஆட்சிக்கு வந்தால் 6 சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக தருவோம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஊழல் செய்த பணத்தை வாக்காளா்களுக்கு அளித்து வெற்றி பெற்று விடலாம் என அதிமுகவினா் கனவு காண்கின்றனா். அது நடக்காது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றுவோம் என்றாா்.
பிரசாரத்தில் வாா்டு செயலாளா் நடராஜ், பகுதி பொறுப்பாளா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.