அரியலூா் மாவட்டம், செந்துறையில் அதிமுக சாா்பில் கோடை கால தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் ரமேஷ் கலந்து கொண்டு, தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.