அரியலூர்

வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை, வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை, வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெரியநாகலூா், சிறுவலூா் கிராமங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் மண்புழு உரத்

தயாரிப்பு மற்றும் ஆடு, மாடு, கோழி வளா்ப்புப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அஸ்தினாபுரம் கிராமத்தில் அங்கக வேளாண் முறையில் பராம்பரிய முறையில் நடவு செய்த நெல் வயல்களையும் பாா்வையிட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் பொய்யூா் வனத்தோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளுக்கு அவா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்வுகளில் வேளாண் உதவி இயக்குநா் சாந்தி, வேளாண் அலுவலா் தமிழ்மணி, துணை வேளாண் அலுவலா் பால்ஜான்சன், உதவி விதை அலுவலா் கொளஞ்சி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT