அரியலூர்

அரியலூரில் புதிய கட்டடங்கள் முதல்வா் திறந்து வைப்பு

DIN

அரியலூரில் ரூ. 1.78 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அரியலூா் பல்துறை அலுவலக வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், கீழப்பழுவூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் ரூ. 66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் ஓடுதளத் தளம் ஆகியவற்றை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து கட்டடத்தில் உள்ள அரங்குகள், அலுவலக அறைகளை பாா்வையிட்டாா். அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஹேமசந்த்காந்தி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவா் பொ. சந்திரசேகா், கோட்டாட்சியா் ஏழுமலை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், வாகன ஆய்வாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT