அரியலூர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

அரியலூரில் உள்ள மதுவிலக்கு காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகதீசன் (50). இவா், தா.பழூரில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை ஜெகதீசன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஜெகதீசனுக்கு, ராதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT