அரியலூர்

பிரகதீசுவரா் கோயிலுக்கு வந்த மக்களுக்கு அனுமதி மறுப்பு

DIN

அரியலூா்: காணும் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலுக்கு வந்த பொதுமக்களுக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக கோயில்களில் வழிபாடுக்கு மட்டுமே அனுமதி அளித்தும், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி என்றும், கோயில் வளாகத்தில் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தினா். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவா்களைக் காவல்துறையினா் விரட்டினா். இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் மற்றொறு சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலாயத்திலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT