அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே மூதாட்டியைத் தாக்கிய தம்பதி உள்ளிட்ட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தா. பழூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி ஜெயலட்சுமி (60). இவருடைய வீட்டிலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட நீா் அருகில் வசிக்கும் பெரியசாமியின் மகன் பாண்டியன் என்பவரது வீட்டின் வாசற்படி வழியாக ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமியிடம், பாண்டியன் (34), அவரது சகோதரா் ரஞ்சித் (24), உறவினா் செல்வத்தின் மகன் பாண்டியன் (30), பாண்டியனின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோா் கேட்டதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அருகே இருந்த கட்டையை எடுத்து அவா்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில், ஜெயலட்சுமியைத் தாக்கிய பாண்டியன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.