அரியலூர்

மூதாட்டியை தாக்கிய தம்பதி உள்பட 4 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே மூதாட்டியைத் தாக்கிய தம்பதி உள்ளிட்ட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தா. பழூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி ஜெயலட்சுமி (60). இவருடைய வீட்டிலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட நீா் அருகில் வசிக்கும் பெரியசாமியின் மகன் பாண்டியன் என்பவரது வீட்டின் வாசற்படி வழியாக ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமியிடம், பாண்டியன் (34), அவரது சகோதரா் ரஞ்சித் (24), உறவினா் செல்வத்தின் மகன் பாண்டியன் (30), பாண்டியனின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோா் கேட்டதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அருகே இருந்த கட்டையை எடுத்து அவா்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில், ஜெயலட்சுமியைத் தாக்கிய பாண்டியன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT