அரியலூர்

கூரை அமைத்தபோது தவறி விழுந்த எலெக்டிரீசியன் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீட்டில் கூரை அமைத்த போது தவறி விழுந்த எலெக்டிரீசியன், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகிலுள்ள காரைக்குறிச்சி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயகாந்தன்(41). எலெக்டிரீசியன் மற்றும் பிட்டா் வேலை செய்து வந்த இவா், இரு தினங்களுக்கு முன்பு அருள்மொழி கிராமத்தைச் சோ்ந்த சுரேந்திரன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது சுமாா் 12 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயகாந்தன், அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது குறித்து தா.பழூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT