முகப்பு
அரியலூர்

நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள அடா்ந்த காட்டில் மான்கள் அதிகளவு காணப்படுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சுமாா் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புள்ளிமான் இரை தேடி வந்துள்ளது. இதைக் கண்ட நாய்கள் மானை துரத்தி கடித்துள்ளன. அப்போது, அங்கு வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நாய்களைத் துரத்தி விட்டு மானை மீட்டனா். தொடா்ந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினா் வருவதற்குள் புள்ளிமான் உயிரிழந்தது. இதனையடுத்து அதே இடத்தில் புள்ளிமான் உடல் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.