அரியலூர்

மரத்தின் மீது பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

DIN

அரியலூா் அருகே திங்கள்கிழமை மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் கோவிந்தராசு (45). விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் மணக்குடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கல்லங்குறிச்சி அருகே மாருதி நகா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராசுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தராசு அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT