மாற்றுத்திறனாளிகள் 70 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கல்
கால்களை இழந்த 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்களை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.
அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கால்களை இழந்த 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்களை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.
இவா்கள் அனைவருக்கும் சென்னை பணியாளா்கள் மூலமாக செயற்கை கால்கள் சரியான அளவில் பொருத்தப்பட்டு, அவா்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், முடநீக்கியல் வல்லுநா் ராமன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.