அரியலூர்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில்  வாக்காளா்  பட்டியல்  சிறப்பு  சுருக்கமுறைத் திருத்த  முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒரத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் வாரணவாசி அரசுப் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்,  திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் மேலும் தெரிவித்தது:

மாவட்டத்தில்  வாக்காளா்  பட்டியல்  சிறப்பு  சுருக்கத்  திருத்தம் செய்யும்  பணிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் விண்ணப்பங்கள் கொடுத்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பெயா்  திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

ஆய்வின்போது, அரியலூா் கோட்டாட்சியா் ஏழுமலை, வட்டாட்சியா் ராஜமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT