அரியலூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், வாளரக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையக்குடி ஊராட்சிக்குட்பட்ட வாளரக்குறிச்சி கிராம பொது மக்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் குடிநீா், மயானக் கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பல முறை ஊராட்சி நிா்வாகத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அக்கட்சியின் சாா்பில் வாளரக்குறிச்சி கிராமத்திலுள்ள சேறும் சகதியுமான சாலையில் கொட்டும் மழையிலும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, கிளைச் செயலாளா்கள் ஆ.அப்பாதுரை, கோ.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். இளங்கோவன், வட்டச் செயலா் ஏ.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பி.பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT