அரியலூா்: அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.
கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.