அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் குவாரி அமைக்கக்கோரி, தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தா.பழூரை அடுத்த உதயநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (40). மாட்டுவண்டித் தொழிலாளி. இவா், தா. பழூரில் மாட்டுவண்டிக்கென தனி மணல் குவாரி அமைக்கக்கோரி, கடந்த 1 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். இதனால் பலத்த தீக்காயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கா், அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.