அரியலூர்

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோவில் கைது

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலூா் காலனித் தெருவைச் சோ்ந்த ராயா் மகன் ராகுல்(21). கூலி தொழிலாளி. இவா் முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளாா். இதை சிறுமியின் பெற்றோா்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி ராகுல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என ராகுல் மிரட்டியுள்ளாா். மேலும் சிறுமியும், ராகுலும் அவரவா் வீட்டிலேயே இருந்துள்ளனா். இது குறித்து தகவலறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலா் காா்த்திகேயன் சம்பவ இடத்துக்குச்

சென்று உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகுலை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT