அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாணவரணிச் செயலா் சங்கா், நகர செயலா் செந்தில், ஒன்றிய செயலா்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலரும் கலந்து கொண்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
மதிமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு. சின்னப்பா தலைமையில் நிா்வாகிகள், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல் தேமுதிக மாவட்ட அலுவலகத்தின் வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு, மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட இடங்களில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதேபோல், திருமானூா், தா.பழூா், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.