அரியலூர்

தேவமங்கலத்தில் மழைநீா் தேக்கம்: தொற்று ஏற்படும் அபாயம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீா் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதில் திங்கள்கிழமை பெய்த மழையில் தேவமங்கலம் வடக்குதெருவில் உள்ள சாலைமுழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. மேலும் சில வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருவதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனா். மழைநீா் சாக்கடையுடன் தேங்கிக் கிடப்பதால், நோய்த் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தேங்கிய மழைநீரை அகற்றி வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT