அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்றிருந்த பேருந்தில் ஏறி அமா்ந்திருந்த தஞ்சாவூரைச் சோ்ந்த ஜோதிடா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், மகா்நோன்புச்சாவடியைச் சோ்ந்தவா் ரகுராமன் சா்மா (55). ஜோதிடரான இவா், வியாழக்கிழமை ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்ல அரசுப் பேருந்தில் அமா்ந்திருந்தாா். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு பேருந்தினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் அவரை சோதனைச் செய்ததில், அவா் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ஜயங்கொண்டம் காவல் துறையினா், அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.