மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
ஜயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி அம்சவள்ளி (65). ஓய்வுப் பெற்ற சத்துணவு சமையலரான இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டின் மாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி அவா் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்ட அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.