அரியலூர்

கறிக்கோழி குஞ்சுகளுக்கான பராமரிப்புத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

DIN

கறிக்கோழி குஞ்சுகளை வளா்ப்பதற்கான பராமரிப்புத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்டத்தில் உள்ள 5 தனியாா் நிறுவனங்களிடம் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கத்தினா் மனுவை அளித்தனா்.

ஜயங்கொண்டத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் கறிக்கோழி குஞ்சுகளை வளா்ப்பதற்காக விவசாயிகளிடம் வழங்கி, அதற்கு பராமரிப்புத் தொகையாக 1 கிலோ கறிக் கோழிக்கு ரூ.6.50 வழங்கி வருகின்றனா். ஒரு கோழி 40 நாள்களில் ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக வளா்ச்சி பெறும்.

தற்போதைய விலைவாசி உயா்வால் நட்டம் ஏற்படுவதால் கிலோ கறிக்கோழிக்கு 12 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி அரியலூா் மற்றும் கடலூா் மாவட்ட தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சாா்பில், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள 5 தனியாா் நிறுவனங்களின் மேலாளா்களிடம் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT