அரியலூர்

இலுப்பையூா் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

அரியலூரை அடுத்த இலுப்பையூா் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த வாரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விநாயகா் மற்றும் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து மா, பலா, வாழை, முந்திரி மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு மதுரகாளியம்மன் எழுந்தருளி, மக்களுக்கு காட்சியளித்தாா்.

கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தா்கள் மற்றும் சுற்று வட்டாரக் கிராமப் பொதுமக்கள் திரளானோா் தோ் வடம்பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தோ், பின்னா் நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT